AI illustration by Surya for the Tamil poem Unarthal by Thamizhachi Thangapandian

உணர்தல்

ச்சியில் தரும்
ஒரு துளி முத்தத்தில்
உயிர்வரை நனைத்து
உடலோடு கிளைபரப்பி
உள்மன வெளியோடித் தழுவி
என் உணர்வுத்தண்டின்
குறுவடத்தைப்
பதியமாய்த் தன்னில் வாங்கிப்
பின் பாதத்தில்
வேர் பதிக்கும்
பெரு விருட்சமாய்
யார் நீ?

இமைப்பீலி பிரித்து
இருவிழி கரித்து
இதழ்ச்சுவை உணர்ந்து
கன்னக்குழியில்
கணம் தடுமாறிச்
செவிமடல் சீண்டிச்
சிலிர்க்கும் நரம்புயாழ்
கூட்டிக்

கழுத்து வளைவில்
தாமதித்துப்
பின் தறிகெடும்
என் தேக ரகசியம்
முழுதும் தேடி
அறியும் திருட்டுக்
காதலனாய்
யார் நீ?

வறண்ட காலடித்
தடங்களோடு
தனிமை தகிக்கின்றதொரு
கோடைகாலத்து
மதியப் பொழுதில்
அது நீயென
முற்றிலுமாய்
நான் மூழ்கி உணர்வேன்
என் செல்ல மழையே

പ്രതിഭാവം വാട്സ്ആപ്പ് ഗ്രൂപ്പിലേക്കു സ്വാഗതം🌹